11 மே, 2024

நீயே எங்கள் தாயே !!

அழகே அமுதே என உனை ஆராதனை செய்வர் கவிஞர் பலர்

ஆனால் அன்பிற்கும் அறிவிற்கும் அடிப்படையே நீயன்றோ !!


கல் தோன்றி மண் தோன்றா காலத்தே எனப் புகழ்வர் புலவர் பலர்

ஆனால் காற்றில் கலந்து கேட்டபொழுதெல்லாம் கண்கலங்க வைக்கும் காரிகையே நீயன்றோ !!


தீஞ்சுவையே தேன்மொழியே என நினை நினைத்துருகுவர் அறிஞர் பலர்

ஆனால் தம்மக்கள் யாவரும் தழைத்திட அருள்புரியும் தாயன்பே எங்கள் தமிழன்றோ !! 




- Dedicated to ETP (Emirates Tamizh Palli) Teachers and Teachers day event organisers. அமீரக தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கும் & அமீரக தமிழ்ப் பள்ளி ஆசிரியர் தின விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சமர்ப்பணம்

15 ஜனவரி, 2019

தை தை தை கவிதை

தை தை தையென நடனமாடினள்
தத்தை மொழி பேசினள்

“உழவும் தெய்வம் விதைத்த‘தை’
அவர் மனையாள் அறுத்த‘தை’
பஞ்சபூதங்கள் காத்த‘தை’
வணிகர் பலர் தருவித்த‘தை’

தந்நிகரில்லா தந்தை கொணர்ந்த‘தை’
அன்பேயுருவான அன்னை சமைத்தாளாம் அதில்

தத்தைக்கு வெண்பொங்கலென பெயராம்
தங்கைக்கு சர்க்கரைப்பொங்கலென பெயராம்
தமையனோ கட்டிகரும்பென இனிப்பானாம்
தம்பியோ அத்தனையும் தின்றுமுடிப்பானாம்”

என தத்தை மொழி பேசினள்
தை தை தையென நடனமாடினள்
தையெனும் திருமகள்
தமிழர்களின் பொன்மகள் !!

பாவாக்கம் – Nachu Hosanna

23 ஜூலை, 2018

விளி

விழியே.. என்னை விளிவாயோ.. ??
விளிவேற்றுமை தமிழை திரித்தாற்போல்
என் நினைவை நின் விழிதான் நிதமும் திரித்துடுதே
விழியே.. என்றேனும் என்னை விளிவாயோ.. ??

- by Nachu for my Annapoorani

29 செப்டம்பர், 2017

சரஸ்வதி பூஜை 2017

அறம் பல செயும் மனம் தருவாயே
புறம் பேசா குணம் தருவாயே
திறம்பட வாழ ஞானம் தருவாயே
ஐம் எனும் சரஸ்வதி தாயே !!

- நாச்சு

மனங்கள் மணந்த நாள் !!

இதயங்கள் இணைந்து ஆண்டுகள் ஏழனாது
இல்லாளின் இல்லறத்தில் வாழ்வே எழிலானது !!!

ஏழாண்டின் உறவு ஏழேழு ஜென்மமும் தொடர வேண்டும்
ஏற்புடைய தம்பதியர் என ஈரேழு உலகமும் போற்ற வேண்டும் !!!

- நாச்சு

15 ஆகஸ்ட், 2017

மாலை நேரம்

மாலை நேரம்...

சில்லென்ற காற்றுடன் சிறுதூறல்...
உன்னழகில் மயங்கிய என் மனதில் பெருமழை...

புது மழையில் பூத்த பொன்மலராய் நீ...
அடாது மழையிலும் விடாது துரத்தும் தேனீயாய் நான்...

யாருக்கும் கேட்காத பாடலொன்று எனக்கு மட்டும் ரீங்காரமாய் கேட்கிறது...
அத்தனை அழகான இயற்கை எழில் நமக்கு மட்டும் ரம்மியமாய் காட்சி தருகிறது...

இந்த உலகம் இந்த நொடியிலே நிலைகுத்தி நின்று விடக்கூடாதா என்ற ஏக்கத்தில் ஏனோ நெஞ்சம் தவிக்கிறது !!!!

இனிய தேசம்

எம் தேசம் இந்திய தேசமடா
எங்கள் உயிரினில் கலந்த தேசமடா...

இங்கு எங்கும் எதிலும் வீசும் சுதந்திர வாசமடா...
இல்லாரையும் வாழவைக்கும் இனியதோர் தேசமடா....

தாய்மண் மீது கொண்டோம் அளவில்லா பாசமடா...
தார்மீக நெறிகளை உலகுக்கே பறைசாற்றிய தேசமடா...

எதிரிப்படை நெருங்கினாலும் செய்வோமதை நாசமடா...
ஏற்றப்பாதையில் வளர்ந்து வரும் எழுச்சி மிக்க தேசமடா...

ஏனோ அரசியல்வாதிகள் இங்கு சற்றே மோசமடா...
எனினும் என்றும் அழியா எங்கள் மண்மீதான நேசமடா...

வானோங்கு வாழ்க பாரதம் !! வளர்ந்தோங்கி வெல்க இந்தியன் என்னும் பெருமிதம் !!!

- பாவாக்கம்
நாச்சு

17 செப்டம்பர், 2016

திருமண நாள் வாழ்த்து

பார்த்த முதல் நொடியில் மனம் ஒருமித்து

நன்மக்காள் இருவர் பெற்று

முக்காலமும் அன்பு பாராட்டி

நால்விழிகளும் காதல் பேசி

பஞ்சபூதங்கள் சாட்சியாக வாழ ஆரம்பித்து

ஆறே வருடங்கள் இனிதே நிறைவடைந்தாலும்

இன்றுபோல் ஏழேழு ஜென்மங்களும் சேர்ந்து வாழ்வேன் உன்னோடு... 💕 💘❤
With Lots of Love, Care and Affection
- Nachu

சகி செய்த சதி

உன் இமைகள் பாவம்
இத்தனை நாள் பட்டாம்பூச்சி போல் சிறகடித்துவிட்டு
என்னைக் கண்ட முதல் நொடியில் உறைந்து விட்டது

என் இதையமும் பாவம்
இத்தனை நாள் ஒரே சீராக இயங்கிவிட்டு
உன் விழி உறைந்த நொடி முதல் அதிவேகத்தில் துடிக்கிறது

வேட்கை தணிவிக்க விழியிரண்டை அசைத்திடு
இதயம் சீராக்க
காதல்மொழி பேசிடு

அந்த சதிக்கு செய்த சதியால் அவள் சதியில் விழுந்தது போல்
என் விதிக்கு உன் விழி செய்த சதியால் காதலில் விழுந்துவிட்டேன் !!

14 ஏப்ரல், 2016

துன்முகி துதி

தீஞ்சுவை சொல்லெடுத்து தமிழன்னை முழங்கிட

செவ்வண்ணக் கொடியுடன் கதிரவன் வந்திட

பாரெங்கும் பசுமைமலர வான்முகில் பெய்திட

தமிழரின் துயர்துடைக்க துன்முகி வந்திட

பிறந்ததாம் புத்துணர்ச்சி பொங்கும் தமிழ்ப்புத்தாண்டு !!

-நாச்சு

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உற்றார் உறவினருக்கும் என் இனிய துன்முகி @ துர்முகி தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

29 செப்டம்பர், 2015

பின்னிரவில் ஒரு சிரிப்பொலி

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது கேட்டது அந்தக் கள்ளச் சிரிப்பொலி

இந்த அதிகாலை நேரத்தில் இத்தனை அழகாய் சிரித்தது யாரென இருட்டில் தேடினேன்

சிரித்தது அவள் தான் என தன் முதல் கற்றை ஒளிக்கீற்றால் காட்டிக்கொடுத்தான் கதிரவன்

கனவில் எதையோ நினைத்துப் புன்முறுவல் புறிந்து கொண்டிருந்தாள் அவள்

குழந்தை உறக்கத்தில் சிரித்தால் இறைவன் பூ கொடுக்கின்றான் என்று அர்த்தமாம்

என்றோ ஒரு நாள் அம்மா சொன்னதை ஞாபகமூட்டியது என் செல்ல மகளின் சிரிப்பொலி

பெருக்கெடுத்த முத்த மழையை அடக்கி அவள் கனவு கெடாமல் ஓரிரு முத்தம் பொழிந்து உறங்கிப்போனேன்

மழலை பேச்சு மட்டுமே ஆனந்தமல்ல மழலை உறக்கமும் அதில் அந்த கள்ள நகைப்பும் பேரானந்தமே !!

- அப்பா 😊

14 ஏப்ரல், 2015

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு !!

தமிழா.... மதம் வளர்க்கிறேன் என்ற பெயரில் ஏன் தமிழன்னையை கொல்லப்பார்க்கிறாய்
மதம் செழிக்க தமிழை மறந்து சமஸ்கிருதத்தின் பின்னால் ஏன் ஓடினாய்
மதம் வளர்க்க தமிழில் அரபியையும் உருதுவையும் கலந்து ஏன் பேசினாய்
மதம் பரப்ப தமிழை விடுத்து அன்னியன் கொணர்ந்த ஆங்கிலத்தை ஏன் நாடினாய்

கடவுள் மொழிகளுக்கு அப்பாற்பட்டவர்
அவரை நாட நாம் வடமொழியையும்
அன்னிய மொழியையும் நாட வேண்டியதில்லை
தாய் தமிழில் வழிபட்டாலே இறைவன் செவிசாய்வான்

இந்த தமிழ்ப்புத்தாண்டில் உறுதி மொழியெடு
மதத்திலும் இசையிலும் மின்னஞ்சலிலும் கைப்பேசியிலும்
முகப்புத்தகத்திலும் எழுதுவதிலும் பேசுவதிலும் மற்ற எல்லா துறையிலும்
முடிந்தவரையில் தமிழை மட்டுமே பயன்படுத்துவேன் என்று உறுதியெடு

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்கச்சொல்வோம் உலகுக்கு !!
இனம் ஒன்றாக மொழி வென்றாக புது வேலை எடுப்போம் விடிவுக்கு !!
தமிழின் வெற்றிப்பாதையில் பிற மொழிகள் வந்தால் அவைகளை விருந்து வைப்போம் தமிழன்னைக்கு !!

-- கண்ணீர் மல்க வேண்டிக்கொள்ளும் ஒரு தமிழன் !!

16 ஜூலை, 2014

தமிழ் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ !!

மகாகவி பாரதியார் மற்றும் அவர் மனைவி செல்லம்மாவின் வாழ்க்கை சரித்திரத்ததில் இருந்து ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது:

ஒரு முறை பாரதியார் கல்கத்தாவில் விவேகானந்தரின் சீடர் நிவேதிதா தேவியை சந்திக்கிறார், அந்த சுவாரசியம் மிகுந்த சந்திப்பில் சமுதாயத்திலும் விடுதலை போராட்டத்திலும் பெண்களின் பங்கு எவ்வளவு அவசியம் என்று தெரிந்து கொள்கிறார். அன்றே உருவாகிறாள் 'பாரதி கண்ட புதுமைப்பெண்' என்ற கதாபாத்திரம்.... அல்லது கவிப்பாத்திரம். அன்று முதல் தன் மனைவி செல்லம்மாவை வீரமும், விவேகமும், வெற்றி வாகை சூடும் புதுமை பெண்ணாகவும் குறிப்பிட வேண்டிய கவிதைகளில், அவரை 'சக்தி' என்றும், 'பராசக்தி' என்றும் குறிப்பிடுகிறார். அதே போல் தன் மனைவி செல்லம்மாவை ஒரு செல்ல குழந்தையாகவும், வருங்காலத்தில் அன்பாகவும் பண்பாகவும் வளரவேண்டிய பிள்ளையாகவும் எண்ணிய கவிதைகளில், அவரை 'கண்ணம்மா' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். நாகரீகம் கருதி அவர் மனைவியின் இயற்ப் பெயரை விடுத்து, 'கண்ணம்மா' என்ற புனைப் பெயரே எல்லா இடங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆக, விடுதலை வேட்கை கொண்ட பாரதி கண்ட புதுமைப்பெண்ணாகவும், அவரின் செல்ல குழந்தை கண்ணம்மாவாகவும் வாழ்ந்தவரே அவர் மனைவி செல்லம்மா !!


இதே போல், பாரதியார் இருந்த போதும், இறந்து விட்ட போதும் அவரின் மனைவி செல்லம்மா தன்  மகள்கள் தங்கம்மாள் பாரதியையும், சகுந்தலா பாரதியையும் வளர்க்க அரும்பாடுபட்டார். பாரதியின் கவிதைகளையும் இலக்கியங்களையும் பதிப்பகம் மூலம் வெளியிட தன் வாழ்நாள் முழுவதும் போராடி களைத்த அவர், 1955-ல் தன் வாழ்வின் கடைசி நாட்களில் கோமா (Coma) நிலைக்கு தள்ளப்பட்டார். பல நாட்கள் கோமாவில் இருந்த அவர், திடீரென்று ஒரு நாள் பாரதியின் கண்ணன் பாட்டில் இருந்து இந்த பாடல் வரிகளை பாடுகிறார்:

"திண்ணை வாயில் பெருக்க வந்தேன் எனைத்
தேசம் போற்றத் தன் மந்திரி ஆக்கினான்"

"திருமால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான்"

இதுவே அவரின் கடைசி வார்த்தைகள். பின்னர் அவர் இறைவனடி சேர்ந்தார். அவர் சேர்ந்த இறைவன் யார் என்றும், கோமாவில் இருந்த அவரின் நெஞ்சு நிறைய புகுந்த திருமால் யார் என்றும் நான் கூறி உங்களுக்கு புரிய வேண்டிய அவசியம் இல்லை.

தமிழுக்காகவே தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த இந்த மாபெரும் அக்னி குஞ்சுகளின் உறவை என்னவென்று வர்ணிப்பது:
சக்தியும், அவளை சேர்ந்த சக்திதாசனும் என்றா...... அல்லது
பாரதியும், அவரின் செல்லப்பிள்ளை கண்ணம்மாவும் என்றா...... அல்லது
கண்ணனும், அவனை இழந்து தவித்த செல்ல அம்மாவும் என்றா...... அல்லது
செல்லம்மாவும், அவர் சென்றடைந்த திருமாலும் என்றா...... அல்லது
தமிழ்க் காதலின் ஒவ்வொரு உருவையும் வாழ்ந்து காட்டிய விடுதலை பறவைகள் என்றா !!


"அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ."
மகாகவி பாரதி

தமிழ் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ !!
மகாகவி பாரதியாருக்கும் அவர் மனைவி செல்லம்மாவிற்கும் என் அர்ப்பணிப்பு 


20 செப்டம்பர், 2013

விழியழகில் வெற்றி

அனைவரின் கருவிழிகளும் வட்டமாகவே இருந்தாலும், 
அவளின் கண்களை உற்று கவனிக்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு தோன்றுவது 
"இந்த கருவிழிகள் மட்டும் எப்படி இத்தனை அருமையான வட்டமாக இருக்கிறதே" என்று.
ஒரு சில நொடிகளாவது ஆகும் என் கிறுக்குத்தனத்தை உணர்ந்து தன்னிலை அடைய !

கண்ணிமைக்காமல் ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டுமென விளையாடி கொண்டிருப்போம்
அவள் ஒவ்வொரு முறையும் முதலில் கண்ணிமைத்து விட்டு தன் தோல்வியை ஒப்புக்கொள்வாள்.
மீண்டும் மீண்டும் கூற முயற்சிப்பேன் "தயவு செய்து அந்த கண்களை இமைக்காதே, 
அந்த கருவிழி வட்டத்தில் நான் சிக்கித்தவிப்பதை ரசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று.

பாவம் அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நான் வெற்றி பெறுவது எதனாலென்று
அந்த கருவிழி அழகில் உறைந்துவிட்ட நான் வென்றேயாகவேண்டும் போட்டியையும் அவள் மனதையும் !!

27 மே, 2013

ஏங்குகிறோம் அப்பா !!


தங்கள் பிறந்த நாளை கொண்டாடி பத்து வருடங்கள் ஆகிறது !!

நினைக்கையில் தொண்டைக்குழி அடைத்து, கண்கள் அருவியாகிறது...
அன்று தெரிந்திருக்கவில்லை இதுவே கடைசி முறை என்று....
தெரிந்திருந்தால், உலகமே ஸ்தம்பித்து விட அன்றே வேண்டியிருப்பேன்...
உங்களின் பொன்னான வார்த்தைகள் ஒவ்வொன்றையும் பதிவு செய்திருப்பேன்...
அன்றிலிருந்தாவது உங்கள் பேச்சை கேட்டு நடக்க முனைந்திருப்பேன்...
தங்கள் புத்தகங்களையும், கவிதைகளையும் படித்து படித்து நெகிழ்ந்திருப்பேன்...
இப்படி எத்தனை கனவிருந்தும், நடவாது என்பதை நினைத்தால் நெஞ்சனைத்தும் நஞ்சாகிறது...

என்றும் உங்கள் அன்புக்கும், அரவணைப்புக்கும், அறிவுரைக்கும் ஏங்கித்தவிக்கிறோம் அப்பா !!

23 மே, 2013

பக்குவம்


இருட்டு, உயரம், பாம்பு, விபத்து, பிரிவு என 
நான் பயந்த ஒவ்வொரு விஷயத்தையும்
திரும்ப திரும்ப செய்தோ, பழகியோ, புரிந்துகொண்டோ, 
எப்படியோ அறவே பயமறுக்க பழகிக்கொண்டாலும்,
இந்த பாழாய்ப்போன தனிமையை மட்டும் 
பழகிக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும் முடியவில்லை
ஒவ்வொரு முறையும் நான் பயந்து நடுங்கி 
தோற்றுப்போகும் விடாக்கொண்டனாகவே இருந்து வருகிறது.
அடுத்த முறையேனும் தனிமையை ரசிக்கும் 
மனப்பக்குவம் வேண்டுமென தவிக்கிறேன் !!

20 அக்டோபர், 2012

Cos, I'm TRULY, DEEPLY, MADLY ...

No doubt, I just keep it going, even when you are away from me....
Although my life goes on, i just miss the liveliness in it... 
Though my times just flies off, i just couldnt count my day in it....
Although my thoughts arent about you always, my feelings just cant get off you...
Though my world doesnt end when you are away, the moment i start missing you, it just freezes right there
Although i will go on without you, there's no true me in it and i will wait for you like this for the days to come....
Though i'll continue to play, rock and sing with the world, there's no music in it as long as you arent with me. 
Cos, i'm truely, deeply, madly in love with you. But, no doubt, I just keep it going. Cos, i'm TRULY, DEEPLY, MADLY ...

-Nachu

30 நவம்பர், 2011

A Night Drive

Pleasant Night, Gentle Breeze,
Some drizzles to make the windshield glare,
And my car's wiper clearing it off seamlessly,
Just like how my angel's sweet little smile wipes off all my worries !!

My eyes gazing thru miles and miles of empty road in front of me,
Thousands and Thousands of her thoughts filling my heart thru out the drive,
And so much eager to touch and kiss her foot sole...
Made last night a most memorable one in my life !!

- Nachu

20 நவம்பர், 2011

இப்படிக்கு அப்பா !!

கனவின் கவிதையே
காக்க வைத்த தீஞ்சுவையே
கொள்ளையழகு புன்சிரிப்பே
கள்ளமாய் ஒரு பொய்யழுகையே
மெய்சிலிர்க்கும்  முதல் ஸ்பரிசமே
கண்ணுறங்கும் செல்லகுட்டியே
உன் வருகை வேண்டி
தினம் எதிர்நோக்குவேன்
என்று வருவாயோ, எனை தேடியே
- இப்படிக்கு அப்பா !!


--- by நாச்சு :)

01 ஜூலை, 2011

நீர்

எத்தனையோ மைல் வேகத்தில் வரும் மழைத்துளி கூட

உன் மேனி தீண்டியதும் அத்தனை மெதுவாய் பயணிக்கிறது….

அதை உடனே இறக்கிவிட்டுவிடு, எனக்கு சற்றே பொறாமையாய் இருக்கிறது… !!

-- நாச்சு


காற்று

ஒரு வகையில் மென்மாலை தென்றலும் நீயும் ஒன்று தான்….

போகிற போக்கில் சில்லென ஒரு புன்னகை வீசி மனதை குளிர வைக்கிறீர்கள் !!

-- நாச்சு

வானம்

தினமும் மாலையில் நீ கோபப்படுகிறாய் போலும்,

உன் கன்னம் சிவப்பதை கண்டு வானமும் சிவந்து தான் போகிறது… !!

-- நாச்சு

15 ஜூன், 2011

எழு !!

விழாமலே இருப்பவன் கோழை...
விழுந்தால் அழுபவன் மூடன்...
விழுந்ததும் எழுபவன் மனிதன்...
விழுந்தும் வேறாய் முளைப்பவன் அறிஞன்...
விழு !! வீறு கொண்டு எழு !!
- நாச்சு

09 மார்ச், 2011

வாருங்கள் வாக்களிப்போம்

வெள்ளையரை விரட்டியடித்து கொள்ளையரிடம் நாட்டை ஒப்படைத்தோம்,
சுதந்திர போர்க்களத்தில் வென்று, தந்திர போர்க்களத்தில் மாண்டு போகிறோம்,
உப்பு சத்தியாகிரகம் செய்ததாலோ என்னவோ, உப்பே சேர்க்காமல் உண்கிறோம்.
கொள்ளயனில் கொஞ்சம் நல்ல கொள்ளையன் எவன் என யோசித்து,
நம் தலையில் விழுந்த மண் போதாதென்று, நம் பிள்ளையர் தலையிலும்
மண் அள்ளிப்போட மற்றுமோர் துரோகிக்கு வாக்களிப்போம்.
கேட்டால், "வாக்களிப்பது என் ஜனநாயக உரிமை", என வீரமாய் கூறுவோம்.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்பது மறந்து போய்,
என்று தணியும் இந்த தந்திர காரர்களின் தாகம் என்றானது !!

-நாச்சு

14 பிப்ரவரி, 2011

காத்தல்

ஒவ்வொரு தமிழ் வார்த்தையும் ஏதாவதொரு வார்த்தையில் இருந்து தான் மருவி வந்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், "காதல்" எனும் வார்த்தைக்கான பெயர்க்காரணத்தை கண்டறிய, ஆழ்ந்த சிந்தனையில் இறங்கினேன்....

காதலை சொல்லிவிட்டலோ, அல்லது சொல்லப்பட்ட காதல் மறுக்கப்பட்டாலோ, அந்த "காதல்" நம்மை அடையும் வரை "காத்திருப்பதால்" தானோ என்னவோ, "காத்திருத்தல்" மருவி "காத்தல்" ஆகி, மேலும் மருவி "காதல்" ஆகியிருக்குமோ என்று தோன்றியது !!

காதலை சொல்லி, அது கிடைத்தும் விட்டால், அந்த காதலை வாழும் காலம் வரை நாம் "காக்க" துடிப்பதாலும், காதலிப்பவரை கண் கலங்காமல் காலம் முழுதும் நாம் "காப்பதாலும்", "காத்தல்" என்ற வார்த்தை மருவி "காதல்" ஆகியிருக்குமோ என்றும் தோன்றியது !!

பெயர்க்காரணம் எதுவாயினும், அந்த வார்த்தை மட்டும் அவ்வளவு அழகு, அதை அனுபவிப்பவர்கள் அழகோ அழகு, அதை ரசிப்பவர்கள் கொள்ளை அழகு!! உலகம் காதல் மயமாகட்டும், உறவுகள் தித்திப்பாகட்டும்... "இனிய காதலர் தின நாள் வாழ்த்துக்கள்" !!

-- நாச்சு

11 பிப்ரவரி, 2011

புலம்பல்

ஒவ்வொரு முறையும் நினைக்கிறேன் கணினிக்கு அடிமையாவதை நிறுத்திவிட வேண்டுமென்று...
ஒவ்வொரு நாளும் நினைக்கிறேன் இன்றோடு பேஸ்புக்-க்கு முழுக்கு போட வேண்டுமென்று...
வீடு திரும்பியும் ப்ராஜெக்ட்-டை கட்டிக்கொண்டு அழுவதை நிறுத்த வேண்டுமென்று...
வீணாக ச்சாட்டிங் செய்து பொழுதை கழிப்பதை அறவே நிறுத்த வேண்டுமென்று...

மனைவிக்கு கோவம் வருகிறது நான் அவள் இருக்கும் போது கணினியே கதி என்று கிடக்கிறேன் என்று...
அம்மாவுக்கு கோவம் வருகிறது நான் அவர்களோடு கோயிலுக்கு செல்லவில்லை என்று...
மகளுக்கு கோவம் வருகிறது நான் அவளோடு கொஞ்சவும் விளையாடவும் வரவில்லை என்று...
மேலாளருக்கு கோவம் வருகிறது நான் இன்னும் அதிகம் வேலை செய்யவில்லை என்று...

நானும் என்ன தான் செய்வேன்...
எனக்கு சோறு போடும் கடவுள் இந்த கணினி தானே...
என் நண்பர்கள் எனக்கு தெரிவதே பேஸ்புக்கின் உருவில் தானே...
என் உறவினர்களோடு நான் உறவாடுவதே இந்த ச்சாட்டிங்கில் தானே...
என் விளையாட்டும் உடற்பயிர்ச்சியும் கூட இந்த பாழாய்ப்போன கணினி தானே...

கனவில் கூட பள்ளிப்பருவத்தை போல ஸ்பைடர்மேன்-னும் சூப்பர்மேன்-னும் வருவதில்லை
அதில் வருவது கூட மீட்டிங்-கில் கத்தும் கஸ்டமர்-ரும் ப்ராஜெக்ட் மேனேஜர்-ரும் தான்...
இன்னும் இந்த கணினி என் தாயாக, மனைவியாக, மகளாக மட்டும் தான் மாறவில்லை,
நண்பன் திருமணத்தை விட முக்கியமானதாக திணிக்கப்பட்டது ப்ராஜெக்ட் டெட்லைன் தான்...

இப்படி கை வலிக்க வலிக்க சம்பாதிப்பது கூட ஒரு வாய் உணவை ரசித்து சாப்பிட இல்லை
அந்த லோன் இந்த லோன் என்று அடிமையாகி கிடப்பதில் இருந்து மீளத்தான்...
இது தெரிந்தும் 'எக்கச்சக்க பணத்தில் கொழிக்கும் சாப்ட்வேர் இஞ்சினியர்கள்' என்று தான் பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள்,
என்ன புலம்பி என்ன பயன், இதையும் பேஸ்புக் ஸ்டேடஸ்-ஸில் போட்டுவிட்டு ஸ்டேடஸ் மீட்டிங்-குக்கு போக வேண்டியது தான் !!

-நாச்சு

14 ஜனவரி, 2011

சும்மா சுறு சுறுன்னு

சும்மா சூரியன் மாதிரி சுட சுட சக்கரப் பொங்கலும்
சும்மா காதலி கன்னத்த மாதிரி திகட்ட திகட்ட கரும்பும்
சும்மா தேள் கொட்டுன மாதிரி விறு விறுன்னு ஜல்லிக்கட்டும்
சும்மா ஷாக் அடிச்ச மாதிரி சுறுசுறுப்பா தைத்திருநாளும்
சும்மா ஷோக்கா என்ஜாய் பண்ணுங்க மக்களே....
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
இனிமே உங்க வாழ்க்கை டாப்பு டக்கரா தூள் கெளப்ப போகுது பாருங்க...
-இப்படிக்கு நாச்சு & பேமிலி

05 ஜனவரி, 2011

சிந்தனைக்கு ஒரு வித்து: God

GOD - This concept has four varieties (Atleast, as per my understanding)

1. Believing in God - Just believing in god, but never worried about doing bad things, just keep screwing the society for your own benefits, and end of the day just pray to god for the heck of it or just for name sake to show others I'm believing in God

2. God fearing - Have fear in god, and obey the rules of humanity, and do whatever (that you feel) God might like. Try to be honest and kind to others as much as possible

3. Don't care about this GOD concept at all - A complete atheist. Never worried about God concept at all. Do good or Do Bad, I just don't worry about this at all. I live my life like how I want.

4. Love is God, Helping others is God, Being kind to other living things is God - I fall into this category. Having fear or belief in Karma, and helping others as much as possible, and trying to be true to others as much as we can, and being kind to animals, plants, etc. I feel this category gives the utmost importance to Humanity.

Now, PLEASE VOTE HERE WHAT CATEGORY DO YOU BELONG TO. Also, whatever category you may belong to, in this new year try to be generous and try to be humane (follow rules of humanity) as much as possible, and you'll see the results of it soon. BE GOOD, DO GOOD, YOU'LL GET GOOD BACK. May this new year be a peaceful one to everyone in the world. WISH YOU A PEACEFUL NEW YEAR

04 ஜனவரி, 2011

வெட்கத்தின் நிறம் சிவப்பு

நிறம், சுவை, மென்மை, ஈர்ப்புத்தன்மை என அத்தனை ஒற்றுமையும் இருந்தும்
ரோஜா இதழ்களுக்கும் உன் இதழ்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது....
நான் முத்தமிட்டால் ரோஜா இதழ்கள் வெட்கத்தில் மேலும் சிவப்பதில்லை !!

-நாச்சு

30 டிசம்பர், 2010

உன் பிறந்தநாள்

எப்படா இந்த கடிகார முள் நகரும் என்று
பன்னிரண்டு மணி அடிக்கும் வரை காத்திருந்து,
மெழுகுவர்த்தியோடு உன் அறையில் நுழைந்து,
மெல்லியதாய் உன்னை தட்டி எழுப்பி, உன் காதருகே
மெல்ல 'happy birthday செல்லம்' என்று சொல்லி,
நீ ஆச்சர்யத்தில் புன்னகைக்கும் போது கேக் வெட்டசொல்லி,
அந்த கேக்-கை உன் முகத்தில் பூசி விளையாடி,
விடிந்ததும் நீ குளிக்க போகும்போது குளியலறை கதவில் போட்ட
பழைய ஆடையை உருவி, தரமாட்டேன் என்று வம்பு பண்ணி,
அதற்க்கு பதில் நான் வாங்கிய மயில் கலர் புதுப்புடவையை கொடுத்து,
அதை நீ கட்டியவுடன் 'ஐயோ chancey இல்ல... தேவதை மாதிரி இருக்க'
என்று கூறி உன் கன்னம் சிவக்க வைத்து, அதில் ஒரு முத்தம் பதித்து,
பின்னர் உன்னை கோவிலுக்கு அழைத்துப்போய், அங்கே குருக்களிடம்
'ஐயரே, இன்னிக்கு எம்பொண்டாட்டிக்கு பொறந்த நாள்,
நூறு வருஷம் தீர்க்க சுமங்கலி பவ-னு மந்திரம் சொல்லுங்கோ' என்று சொல்லி,
'இருடா, நூறு வருஷம் உன்னை பாடாப்படுத்த போறேன் பாரு',
என்று சொல்லிக்கொண்டே நீ என் பைக்கில் ஏறி என்னை கட்டிக்கொண்டு,
உன் ஆசைப்படி முதியோர் இல்லத்தில் அனைவருக்கும் விருந்தளித்து,
பின்னர் உன் கன்னம் ஒட்டிக்கொண்டே கடற்கரையில் காற்று வாங்கி,
உனக்கு ஓரிரு மொக்கை கவிதையும் கரடி பொம்மையும் பரிசளித்து,
வீடு சேர்ந்ததும் நீ என் தோள் சாய்ந்து 'நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேண்டா,
Thank You' என்று நீ சொல்லும்போது, 'ச்சீ, Thank You எல்லாம் சொல்லாத லூசு',
என்று உன் தலையில் செல்லமாய் தட்டி, உன்னை இறுக்க கட்டிக்கொண்டு.......
..........
என...... ......... இவை அத்தனையும் தொலைபேசியிலேயே வாழவேண்டிய கட்டாயத்தில்
நீயும் நானும்..... " இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! "

--நாச்சு

17 டிசம்பர், 2010

உயிர்த்தல்

கிறுக்கல்கள் என நினைத்த வார்த்தை யாவும், நானும் ஒரு கவிதை தான் என முட்டி மோதி எழுகின்றன....
உளறல்கள் என ஒதுக்கிய பேச்சுக்கள் யாவும், நானும் ஒரு காதல் மொழி என உயிர்த்தெழுகின்றன ...
சத்தங்கள் என வெறுத்த ராகம் யாவும், நானும் ஒரு மெல்லிசை என துடித்தெழுகின்றன...
கோடுகள் என கசக்கிய காகிதம் யாவும், நானும் ஒரு ஓவியம் என மலர்ந்தெழுகின்றன...
இத்தனைக்கும் உயிர் கொடுத்துவிட்டு ஒன்றும் தெரியாதவள் போல் மெல்லியதாய் சிரிக்க எப்படி முடிகிறது உன்னால் மட்டும்?

-நாச்சு

08 டிசம்பர், 2010

டவுன் பஸ்

கருந்தேள் போல கருவிழியால கொட்டிப்புட்ட,
கருவாப்பய நெஞ்சு கெடந்து துடிக்குது புள்ள,
கன்னம் ரெண்டில் மயிலெறகா சீண்டிபுட்ட,
கிறுக்குப்பய கன்னம் இப்போ ஏங்குது புள்ள,
தோள் சாஞ்சு என் எடைய கொஞ்சம் கூட்டிபுட்ட,
சண்டிப்பய மனசு எனம்புரியாம தவிக்குது புள்ள,
நாளைக்கும் இதே பஸ்ஸுல தான் வருவேன்,
நீயும் வந்துரு என்னக்கொஞ்சம் அள்ளிக்கொள்ள....

- நாச்சு

01 நவம்பர், 2010

குட்டித்தூக்கம்

நீ என்னிடம் கோவித்துக்கொண்டு அந்த பக்கம் திரும்பி படுத்தாலும்
உன் மேல் செல்லமாய் கால் போட்டு தூங்குவேனே,
நீ நிதமும் காலையில் என் காதை திருகி எழுப்பினாலும்
பொய்யாய் ஒரு குட்டித்தூக்கம் போடுவேனே,
அதற்காகவாவது பெரியவனாகியும் உன் மடியில் படுத்துறங்க வேண்டும் அம்மா.

-- நாச்சு

நான் கடவுள்

நம் கடற்கரை இரவுகளில், நெருப்பாய் உன் தீண்டல் என்னை சுட,
பஞ்சபூதங்களும் சேர்ந்து தொழும் கடவுளாகிறேன்

-- நாச்சு

14 அக்டோபர், 2010

நியதியின் இயற்கை

கண்ணயரும் போது சின்ன கனவொன்று தோன்றுவது போல்
மென்மாலையில் செல்லக்குரலொன்று கேட்பது போல்
மனதில் நின்றதொரு ராகத்தை தன்னையறியாமல் முனுமுனுப்பது போல்
என்றோ பழகிய ரம்மியமான வாசனையொன்றை நுகர்வதை போல்
மழைச்சாரலும் குளிர்காற்றும் கலந்து மயிர்கூச்செறிய செய்வது போல் தான் காதலும்.
எதிர்பாரா நேரத்தில் துள்ளிக்கொண்டு நம் மனதை துளைத்து ஆட்டிப்படைக்கும்...
வரவேண்டிய பொழுதில் வரவேண்டியவர்களுக்கு வந்தே தீருவதுதான் இயற்கையின் நியதி !!

-- நாச்சு

ஓவிதை கவியம்

நினைத்த நொடியில் முகம் மலர வைக்கும் அவசரக்கவிதை நீ.
பார்த்த நொடியில் மெய் சிலிர்க்க வைக்கும் துறுதுறு ஓவியம் நீ.

-- நாச்சு

கோமாளிகள் உலகம்

அம்மாவை பிரிந்து,
நண்பர்கள் தொலைத்து,
உறவுகள் மறந்து,
அறுசுவை உணவு விட்டு,
ட்ரெக்கிங் துறந்து,
பைக்கிங் மறந்து,
கனவுகள் கலைத்து,
தாய்நாட்டை விலகி.....
காசு சம்பாரிக்க போனானாம் நாகரிக கோமாளி....

-- நாச்சு

ஓர் உறவு

எத்தனை கோபமாய் சண்டை போட்டாலும்
எத்தனை விஷயங்களை மறைத்தாலும்
பிடிக்காதது போல் எத்தனை முறை நடந்துகொண்டாலும்
புரியாமல் எத்தனை முறை வாதாடினாலும்
பின்னாளில் மனம் வருந்தி, ஏங்கி தவிக்கும் ஒரே உறவு
தந்தை - பிள்ளை உறவு !!!

-- நாச்சு

ஆயக்கலைகள் அறுபத்தி ஐந்து

ஆயக்கலையில் அறுபத்தைந்தாம் கலையாய் சிரிப்பை ரசிக்கும் கலையை சேர்க்கக்கோரி மனு வைத்துள்ளேன்.
சேர்த்து விட்டால், அதில் நான் ஜெயித்த பெருமை, என்றும் உன்னையே சேரும்

-- நாச்சு

கண்ணீர் பரிசு

நான் உனக்காக பத்து பதினைந்து வளையல்கள், ஒரு ஜோடி கொலுசு, நான்கைந்து கரடி பொம்மைகள், ஏழெட்டு கிரீட்டிங் கார்டுகள் வாங்கி வந்த போதும், அதை பார்த்து சந்தோஷ கண்ணீர் விட்டு, "நீ எனக்காக ஆசையா எவ்ளோ வாங்கி இருக்க, ஆனா என்கிட்ட அவ்ளோ காசு இல்லை. அதுனால உனக்கு இந்த சாக்லேட்டும், நம்ம பேரு போட்ட கீசெயினும் தாண்டா வாங்கினேன். எனக்கு ஒரே கஷ்டமா இருக்குடா" என்று சொன்னபோது பளார் என்று அறைந்தது போலிருந்தது.

"அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை செல்லம், உன்னை பாத்ததே பெரிய சந்தோஷம், இதுக்கு மேல நம்ம பேரு போட்ட கீசெயின் வேற. இது போதாதா எனக்கு", என்று சொல்லி உன்னை பொத்தாம்பொதுவாய் சமாதான படுத்திவிட்டு, "உன் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல், இத்தனை பரிசுப்பொருள் வாங்கி உன்னை காயப்படுத்தி விட்டேன்" என்று எனக்குள் நினைத்துக்கொண்டு, விழுகவந்த ஒரு சொட்டு கண்ணீர்த்துளியை கண்ணாலே முழுங்கிக்கொண்டு, தொண்டை அடைக்க உன்னை பார்த்து வெறுமையாய் பல்லிளித்தேன்.

-- நாச்சு

Rain of Advices..... Needed !!

Advice.... Advice..... Advice.....
ச்சே...... எதுக்கெடுத்தாலும் Advice.....
காலைல சீக்கிரம் எந்திரி,
exam-க்கு ஒழுங்கா படி,
டிபன் சாப்பிடாம exam-க்கு போகாத,
exam-ல bit அடிக்காத,
class-ல bubblegum சாப்பிடாத,
கெட்ட வார்த்தை பேசாத,
பஸ் ஸ்டாப்-ல அந்த பொண்ணு பக்கத்துல உக்காந்து பேசாத,
காலேஜ் பஸ்-ல தொங்கிகிட்டு போகாத,
lab, practice exam எல்லாத்தையும் கட் அடிச்சுட்டு சினிமா-க்கு போகாத,
இப்டி ஊரு சுத்தி சுத்தி, படிக்காம arears வைக்காத,
arears exam-க்கு படிக்காம phone பேசிக்கிட்டு இருக்காத,
college படிக்கும் போதே cellphone use பண்ணாத,
இப்படி ragging பண்ணி suspend ஆகாத,
எங்களுக்கு தெரியாதுன்னு நெனச்சுகிட்டு அந்த பொண்ணு கூட ஊரு சுத்தாத,
semester holidays-ல cricket cricket-னு இருக்காம எதாவது useful-ஆ training attend பண்ணு,
எப்போவாவது ஒரு தடவை கோவிலுக்கு போ,
campus interview-க்கு படிக்காம beach -ல என்ன அரட்டை வேண்டிகிடக்கு,
friends, friends-னு friends-க்கு குடுக்குற மரியாதை parents-க்கும் teachers-க்கும் குடு,
இப்படி நடுரோட்ல பொறுக்கி மாதிரி சண்டை போட்டு மானத்தை வாங்காத,
bike-ஐ வேகமா ஓட்டாத.... ஏற்கனவே ஆன ஒரு கொடுரூமான accident போதும்,
அப்ப்ப்ப்ப்பா..... எதுக்கெடுத்தாலும் advice..... தினம் தினம் advice,
இந்த advice-க்கு எல்லாம் ஒரு முடிவே இல்லையா ஆண்டவா-னு நெனச்சது உண்டு,
ஆனா இப்படி ஒரேடியாய் முடிவு வரும் என்று எதிர்ப்பார்க்கவில்லை,
இப்போவெல்லாம் life-ல tough times வரும்போது advice பண்ண நீங்க இல்லையே-னுதான் நினைக்கிறேன் அப்பா !!
நீங்க பண்ண ஒவ்வொரு advice-ம் எவ்ளோ அர்த்தமுள்ளதுன்னு இப்போ feel பண்றேன் அப்பா.... Too Late Now !!!

-- நாச்சு

காலம் எனும் அவலம்

இறந்தகால நினைவுகளில் வாழ்கிறேன், வாழும்கால நினைவுகளை இறக்கவிட்டு

-- நாச்சு

Dedication to Tamil Annai & AR Rahman for Tamil National Anthem

உணர்ச்சி ததும்ப வைக்கும் எங்கள் தமிழ்,
கண்கள் கலங்க வைக்கும் எங்கள் தமிழ்,
குரல் தழுதழுக்க வைக்கும் எங்கள் தமிழ்,
ஆசை பொங்க வைக்கும் எங்கள் தமிழ்....

தமிழன்னைக்கு ஒரு தமிழ் தேசிய கீதமாம், மறத்தமிழன் இசையில்.....
வரவேற்கிறோம் தமிழ் தேசிய கீதத்தை, வணங்குகிறோம் தமிழன்னையின் பாதத்தை.....
வழிமொழிகிறோம்... 'தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா'.... எனும் நாமத்தை....

-- நாச்சு

- தமிழன் நாச்சு

இமையாமை !!

புகைப்படத்தில் கூட உன் கண்களை கண்டுவிட்டால்,
என் கண்களை இமைக்க மறந்துவிடுகிறேன்.
நேரில் எத்தனை மணி நேரம் பார்ப்பேனோ...
பாவம் நீ !! உன் கண்களும் தான் !!!

-- நாச்சு

சில நொடிகள் ஆகிறது

உங்கள் பாசம் கிடைக்காமல் தவித்து சில வருடங்கள் ஆகிறது
உங்கள் அரவணைப்பை தவறவிட்டு சில காலம் ஆகிறது
உங்கள் முகம் மறந்து சில நாட்கள் ஆகிறது
உங்கள் புகைப்படம் பார்த்து சில மணி நேரம் ஆகிறது
கடைசியாய் உங்களுக்காக அழுது சில நொடிகள் ஆகிறது
தந்தையர் தினத்தில் வாழ்த்த வார்த்தைகள் இருந்தும், வழி இல்லாமல் போனது அப்பா
எத்தனை லட்சங்கள், எத்தனை கோடிகள் சம்பாதித்தும்,
உங்களுக்காக ஒரு கைக்குட்டை கூட வாங்க முடியவில்லை அப்பா.... :(

-- நாச்சு

காண் கண்

பெண் என்பவள் யாதென தெரிந்தேன்
அவள் கண் என்ன செய்யுமென அறிந்தேன்
இருந்தும் விதி மாறாமல் தொடர்ந்தேன்
தெரிந்தும் தொடர்ந்ததனால் தொலைந்தேன் !

-- நாச்சு

களவாணி

விதவிதமாய் பார்க்கிறாய், அழகழகாய் சிரிக்கிறாய்

படபடவென கதைக்கிறாய், சிடுசிடுவென சிணுங்குகிறாய்

கண்ணாலே என் ஆணவம் கொல்கிறாய்

தன்னாலே எனை சிரிக்க வைக்கிறாய்

என்மேலே வந்து தவழ்கிறாய்

பின்னாலே என்னை கவர்கிறாய்

இதிலெல்லாம் உனை பிடித்திருந்தும்

உன் ஒரு செயல் பிடிக்கவே இல்லை,

என் மனதை மொத்தமாய் திருடாமல்

கொஞ்சம் கொஞ்சமாய் கொள்ளையடித்திருக்கலாம்.

- நாச்சு

என்ன பிடிக்கும்?

கதை பேசும் அந்தி மாலை,
கட்டியணைக்கும் விடியற்காலை,
காதலில் உருகும் நண்பகல்,
காமம் பெருகும் நடுநிசி.... என
கைப்பிடித்த கல்யாண நாள் முதல்
காணத்துடிக்கும் கடைசி நொடி வரை
என் நினைவுகளில் நீயே இருந்து
என் நாட்களை நீயே வாழ்ந்து
என்னை எனக்கே பிடிக்க வைத்துவிட்டாய்!!

-- நாச்சு