நான் உனக்காக பத்து பதினைந்து வளையல்கள், ஒரு ஜோடி கொலுசு, நான்கைந்து கரடி பொம்மைகள், ஏழெட்டு கிரீட்டிங் கார்டுகள் வாங்கி வந்த போதும், அதை பார்த்து சந்தோஷ கண்ணீர் விட்டு, "நீ எனக்காக ஆசையா எவ்ளோ வாங்கி இருக்க, ஆனா என்கிட்ட அவ்ளோ காசு இல்லை. அதுனால உனக்கு இந்த சாக்லேட்டும், நம்ம பேரு போட்ட கீசெயினும் தாண்டா வாங்கினேன். எனக்கு ஒரே கஷ்டமா இருக்குடா" என்று சொன்னபோது பளார் என்று அறைந்தது போலிருந்தது.
"அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை செல்லம், உன்னை பாத்ததே பெரிய சந்தோஷம், இதுக்கு மேல நம்ம பேரு போட்ட கீசெயின் வேற. இது போதாதா எனக்கு", என்று சொல்லி உன்னை பொத்தாம்பொதுவாய் சமாதான படுத்திவிட்டு, "உன் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல், இத்தனை பரிசுப்பொருள் வாங்கி உன்னை காயப்படுத்தி விட்டேன்" என்று எனக்குள் நினைத்துக்கொண்டு, விழுகவந்த ஒரு சொட்டு கண்ணீர்த்துளியை கண்ணாலே முழுங்கிக்கொண்டு, தொண்டை அடைக்க உன்னை பார்த்து வெறுமையாய் பல்லிளித்தேன்.
-- நாச்சு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக