கிறுக்கல்கள் என நினைத்த வார்த்தை யாவும், நானும் ஒரு கவிதை தான் என முட்டி மோதி எழுகின்றன....
உளறல்கள் என ஒதுக்கிய பேச்சுக்கள் யாவும், நானும் ஒரு காதல் மொழி என உயிர்த்தெழுகின்றன ...
சத்தங்கள் என வெறுத்த ராகம் யாவும், நானும் ஒரு மெல்லிசை என துடித்தெழுகின்றன...
கோடுகள் என கசக்கிய காகிதம் யாவும், நானும் ஒரு ஓவியம் என மலர்ந்தெழுகின்றன...
இத்தனைக்கும் உயிர் கொடுத்துவிட்டு ஒன்றும் தெரியாதவள் போல் மெல்லியதாய் சிரிக்க எப்படி முடிகிறது உன்னால் மட்டும்?
-நாச்சு
1 கருத்து:
Really a good one Nachu!
Very simple and excellent..
Ram
கருத்துரையிடுக