23 மே, 2013

பக்குவம்


இருட்டு, உயரம், பாம்பு, விபத்து, பிரிவு என 
நான் பயந்த ஒவ்வொரு விஷயத்தையும்
திரும்ப திரும்ப செய்தோ, பழகியோ, புரிந்துகொண்டோ, 
எப்படியோ அறவே பயமறுக்க பழகிக்கொண்டாலும்,
இந்த பாழாய்ப்போன தனிமையை மட்டும் 
பழகிக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும் முடியவில்லை
ஒவ்வொரு முறையும் நான் பயந்து நடுங்கி 
தோற்றுப்போகும் விடாக்கொண்டனாகவே இருந்து வருகிறது.
அடுத்த முறையேனும் தனிமையை ரசிக்கும் 
மனப்பக்குவம் வேண்டுமென தவிக்கிறேன் !!

கருத்துகள் இல்லை: