14 அக்டோபர், 2010

என்ன பிடிக்கும்?

கதை பேசும் அந்தி மாலை,
கட்டியணைக்கும் விடியற்காலை,
காதலில் உருகும் நண்பகல்,
காமம் பெருகும் நடுநிசி.... என
கைப்பிடித்த கல்யாண நாள் முதல்
காணத்துடிக்கும் கடைசி நொடி வரை
என் நினைவுகளில் நீயே இருந்து
என் நாட்களை நீயே வாழ்ந்து
என்னை எனக்கே பிடிக்க வைத்துவிட்டாய்!!

-- நாச்சு

கருத்துகள் இல்லை: