14 அக்டோபர், 2010

களவாணி

விதவிதமாய் பார்க்கிறாய், அழகழகாய் சிரிக்கிறாய்

படபடவென கதைக்கிறாய், சிடுசிடுவென சிணுங்குகிறாய்

கண்ணாலே என் ஆணவம் கொல்கிறாய்

தன்னாலே எனை சிரிக்க வைக்கிறாய்

என்மேலே வந்து தவழ்கிறாய்

பின்னாலே என்னை கவர்கிறாய்

இதிலெல்லாம் உனை பிடித்திருந்தும்

உன் ஒரு செயல் பிடிக்கவே இல்லை,

என் மனதை மொத்தமாய் திருடாமல்

கொஞ்சம் கொஞ்சமாய் கொள்ளையடித்திருக்கலாம்.

- நாச்சு

கருத்துகள் இல்லை: