கண்ணயரும் போது சின்ன கனவொன்று தோன்றுவது போல்
மென்மாலையில் செல்லக்குரலொன்று கேட்பது போல்
மனதில் நின்றதொரு ராகத்தை தன்னையறியாமல் முனுமுனுப்பது போல்
என்றோ பழகிய ரம்மியமான வாசனையொன்றை நுகர்வதை போல்
மழைச்சாரலும் குளிர்காற்றும் கலந்து மயிர்கூச்செறிய செய்வது போல் தான் காதலும்.
எதிர்பாரா நேரத்தில் துள்ளிக்கொண்டு நம் மனதை துளைத்து ஆட்டிப்படைக்கும்...
வரவேண்டிய பொழுதில் வரவேண்டியவர்களுக்கு வந்தே தீருவதுதான் இயற்கையின் நியதி !!
-- நாச்சு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக