மாலை நேரம்...
சில்லென்ற காற்றுடன் சிறுதூறல்...
உன்னழகில் மயங்கிய என் மனதில் பெருமழை...
புது மழையில் பூத்த பொன்மலராய் நீ...
அடாது மழையிலும் விடாது துரத்தும் தேனீயாய் நான்...
யாருக்கும் கேட்காத பாடலொன்று எனக்கு மட்டும் ரீங்காரமாய் கேட்கிறது...
அத்தனை அழகான இயற்கை எழில் நமக்கு மட்டும் ரம்மியமாய் காட்சி தருகிறது...
இந்த உலகம் இந்த நொடியிலே நிலைகுத்தி நின்று விடக்கூடாதா என்ற ஏக்கத்தில் ஏனோ நெஞ்சம் தவிக்கிறது !!!!